சோவியத் நாட்டில் உதவாக்கரை தனிநபர்வாதம் பேசி, பாட்டாளி வர்க்க அரசை எதிர்த்து கருத்துக் குழப்பம் விளைவிக்கும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கூட உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொழிலாளர்களை முரடர்கள் என்றும் பண்பாடற்றவர்கள் என்றும் கருதும் இந்த மேட்டிமைவாதிகள் மண்ணில் உழைத்து அவர்கள் உண்ணும் சோறு எப்படி எவரால் உருவாக்கப்படுகிறது என்று அறியட்டும். அவர்களுக்கு உண்மையைக் கற்பிக்க வேறு வழியே இல்லை.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)