சராசரிப் பாமரன் இவன். இவனது பெருந்திரளே வரலாறு என்று பெருகி நின்று என்னை நாளை மதிப்பிடும். இவனிடம் என் பிம்பத்தை ஓட்டைகளின்றி விற்றுவிட்டால், நான் வென்றேன். அதன் பொருட்டு – அந்த வெற்றியின் பொருட்டு - நான் சாகவும் தயார். எத்தனை இழிவு! எத்தனை கீழ்மை! எத்தனை அபத்தம்! என் அந்தரங்கம் கூசுகிறது. இந்த பேதமையின், குரூரத்தின், கபடத்தின் அளவுகோல்களுக்குமுன் என் முதுகைத் திருப்பிக் காட்டிவிட்டு வாழ முடிந்தால் - இம்மிகூட இச்சையும் சபலமும் இன்றி இதைச் செய்ய முடிந்தால் - அடையாளமின்றித் தொலைந்து போவதனுடாக என் முழுமையைக் காணமுடிந்தால் அன்று மட்டுமே நான் என் மரியாதைக்குரியவனாக இருப்பேன்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)