வாசிப்பு என்பது ஒப்புக் கொடுப்பதல்ல எதிர்கொள்வது. ஏற்பதிலிருந்தல்ல, மறுப்பதிலிருந்தே வாசிப்பு தொடங்குகிறது. மறுப்பதற்கான உத்திகளை நாம் பலவகையில் உருவாக்குகிறோம். நமது அனுபவ மண்டலத்துக்கு அதைக் கொண்டு வந்து பரிசீலிக்கிறோம். நம் அறிதல்களை போட்டுப்பார்க்கிறோம். நமது கோட்பாடுகளை செயலாக்கிப் பார்க்கிறோம். இதில் பல சமயம் நம் நேர்மையின்மை வெளிப்படலாம். அப்படைப்பை நிராகரிக்க, நமது உதாசீனத்தை, தந்திர புத்தியை நாம் பயன்படுத்தலாம். எல்லா காலத்திலும் இலக்கியப் படைப்புகள் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன; திரிக்கப்பட்டுள்ளன; அவமதிக்கவும், வசை பாடப்படவும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீறி படைப்பு நம் ஆழ்மனதுடன்
...more