மனித ஆளுமை என்பது அவன் எந்த விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதைச் சார்ந்து உருவாவதில்லை. ஏராளமான விஷயங்களை அறிந்த ஒன்றுக்கும் பயனில்லாதவர்களை நான் நிறையவே கண்டிருக்கிறேன். மனிதஅறிவும், விவேகமும் அம்மனிதன் கொள்ளும் அனுபவங்கள், அவ்வனுபவங்களில் இருந்து அவன் பெறும் அகப்பக்குவம் ஆகியவற்றைச் சார்ந்து மட்டுமே உருவாகின்றன.