உண்மையில் ஆசிரியர்களை அறியும்போது கூடவே விமர்சனமும் இருந்தால் அவர்களை அறியவே முடியாது. ஆசிரியர்களை வாசிக்கும்போதே எழும் விமர்சனம் என்பதற்கு என்ன பொருள்? நானும் ஒரு ஆள்தான் என அவருடைய படைப்புகளுக்கு முன் மார்பை விரிக்கிறோம் என்று மட்டும்தான். அந்த ஆணவமே நம்மை அவரிடமிருந்து விலக்கும் திரையாக ஆகிவிடும். பெரும்பாலும் இப்படிச் சொல்பவர்கள் ஏற்கனவே அரசியல் சார்ந்த நிலைபாடுகளுக்கு வந்திருப்பார்கள். மாறாத நிலைபாடுகளை கொண்டிருப்பார்கள். அசட்டு ஆணவங்களால் ஆட்டுவிக்கப்படுவார்கள். ஆசிரியர்களை ‘ஆய்வு’ செய்ய சில நிலையான கருவிகளையும் வைத்திருப்பார்கள். அவர்கள் வாசிப்பதே இல்லை.