ஆனால் இலக்கியம் கேளிக்கையும், உபதேசமும் அல்ல. அது வணிகம் அல்ல. இலக்கியம் என்பது உக்கிரமான ஆன்மீகத் தேடல் மற்றும் கருத்தியல் செயல்பாடு. ஓர் இலக்கிய படைப்பு எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி, அதன் உச்சகட்ட நோக்கம் உலகின் அனைத்து மக்களையும் முழுமையாக வெற்றி கொள்வதே. ஒர் இலக்கியவாதி எழுதும்போது அவனது மனதின் ஆழத்தில் உள்ள படைப்பு சக்தி உலகின் மிகச் சிறந்த ஆக்கத்தை உருவாக்கவே தவிக்கிறது. உலகை முழுக்க தன் பக்கம் திருப்பவே அது எண்ணுகிறது.