உண்மையில் இலக்கிய வாசகன் என்பவன் அவனே. அவனுக்கு இலக்கியப்படைப்பும், இலக்கிய ஆசிரியனும்தான் முக்கியம். இலக்கியப்படைப்புக்கும் தனக்கும் நடுவே இன்னொரு குரல் ஒலிப்பதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். இலக்கிய ஆசிரியனுக்கும் தனக்கும் நடுவே மிக அந்தரங்கமான நீண்ட உரையாடலையே அவன் நிகழ்த்துவான். அங்கே புறச்சூழலின் கருத்துக்களுக்கும் ஓசைகளுக்கும் இடமே அளிக்கமாட்டான்.