அது ஒரு படிமம். அது நம்மால் கற்பனையில் வளர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆசிரியர் நமக்கு அளிப்பது ஒரு செய்தியையோ எண்ணத்தையோ அல்ல. அவர் நமக்கு அளிப்பது நாம் வளர்த்தெடுக்கவேண்டிய ஒரு படிமத்தை புனைவெழுத்திலும் செய்திகளும் எண்ணங்களும்தான் இருக்கும். ஆனால் அவை இங்கே நாம் கற்பனையில் வளர்த்தெடுக்க வேண்டியவையாக இருக்கும்.