மாறாக இலக்கியப் படைப்பு நம் மீது ஒரு கருத்தியல் தாக்குதலை நிகழ்த்துகிறது. நாம் உறுதிபடக் கட்டி வைத்துள்ள அனைத்தையும் அது கலைத்துப் போடுகிறது. நமது நம்பிக்கைகளை ஐயத்துக்குள்ளாக்குகிறது. பெரிய நாவல்களை படித்து முடித்ததும் நாம் ஒரு வெட்டவெளிக்கு வீசப்படுகிறோம். அந்த வெறுமையிலிருந்து மெல்ல மெல்ல மீளும் போது நாம் மீண்டும் நம்மை கட்டி நிலை நாட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். சற்றுத் தள்ளி, சற்று மாற்றி. இதுவே அந்நாவலின் பங்களிப்பு.