ஒரு வாசகன் நூலகத்துக்குச் சென்றதுமே இயல்பாக பெரியநாவல்களை தேடுகிறான் என்றால்தான் அவன் நல்ல வாசகன், அவனுக்கு வாசிப்பில் சிக்கல்கள் இல்லை, அவனால் மொழியை நிகர்வாழ்வாக முயற்சியே இல்லாமல் மாற்றிக்கொள்ள முடிகிறது, அவன் அதில் திளைத்திருக்க விழைகிறான் என்று அதற்குப்பொருள். சிறு நாவல்களை அவன் ஏமாற்றமடையச் செய்பவையாக நினைக்கக்கூடும், அவை அவன் வாழத் தொடங்கும்போதே முடிந்துவிடுகின்றன.