நல்ல வாசகன் என்பவன் வாசிப்பால் உருவாகிறவன் அல்ல. அவன் நுண்ணுணர்வு உடையவன் என்பதனால்தான் நல்ல வாசகனாக ஆகிறான். அவனால் போலிப்பாவனைகளை, வறட்டு அரசியல்களை, எளிய காழ்ப்புகளை உடனடியாக அடையாளம் காணமுடியும். அவற்றை நிராகரித்து தனக்குரிய இலக்கியத்தையும் ஆசிரியர்களையும் கண்டடைய முடியும். அந்த திறன் இயல்பிலேயே இல்லாதவன் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க நேர்ந்தாலும் அவனால் அவற்றை உள்வாங்க முடியாது. அவன் வாசிப்பே பயனற்றதுதான்.