ஏன் புனைவு தேவைப்படுகிறது? அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்படிச் சொல்கிறேன். தகவலுண்மைகளுக்கு அப்பால் வேறுவகை உண்மைகள் உள்ளன என நாம் பொதுவாக உணர்வதில்லை. அவை நாம் நம் அகத்தே உணர்பவை, ஆகவே அகஉண்மைகள். அவ்வுண்மைகளை நாம் இன்னொருவர் சொல்லி நாம் அடைய முடியாது. அது தெரிந்துகொள்ளும் உண்மை அல்ல, உணர்ந்துகொள்ளும் உண்மை. அவ்வாறு உணர்ந்துகொள்ளச் செய்வதற்கே நமக்குப் புனைவுகள் தேவைப்படுகின்றன.