இரண்டு, தங்களால் அடையாளப்படுத்திக் கொள்ள இயன்ற வாழ்க்கையை மட்டுமே இவர்களால் ரசிக்கமுடியும். எந்த கதையானாலும் அதை ஏற்கனவே தாங்கள் அறிந்த வாழ்க்கையைக் கொண்டு மதிப்பிடுவார்கள். அவ்வண்ணம் முன்னரே அறியாத வாழ்க்கை என்றால் அன்னியமாக உணர்வார்கள், வாசிப்பு ஓடாது. தகவல்களைத் தவறவிடுவார்கள். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.