ஏன் இவை நிகழ்கின்றன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? பண்பாடு, கலாச்சாரம் குறித்து பேசும் இலக்கியவாதிகள் ஏன் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள்? அவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் முன்னோடிகளாக இருக்கக் கூடாது? தங்கள் படைப்புகளை எழுதி அவற்றை காலத்தின் தீர்ப்புக்கு விட்டு விட்டு ஏன் மெளனமாக இருக்கக் கூடாது? இக்கேள்விகள் மீண்டும், மீண்டும் எழுப்பப்படுகின்றன. வணிக எழுத்தாளர்களும், இதழ்களும் மீண்டும், மீண்டும் எழுதி இலக்கியவாதிகளை அற்பர்களாகக் காட்ட முனைகிறார்கள். இது சிந்திப்பதற்குரிய ஒரு விஷயமே.