ஏன் இந்த சலிப்பு? ஓர் ஊடகம் எளிதாகக் கிடைப்பதனால், அது நம்மேல் வந்து மோதுவதனால் மட்டும் நாம் அதில் ஈடுபட முடியாது. நாம் எவ்வளவு தேடுகிறோம், எவ்வளவு வாங்கிக்கொள்கிறோம் என்பது முக்கியம். நம்முள் எழும் கேள்விகளின் விளைவாக நாமே தேடிக்கண்டடையாத ஒன்றில் நம் ஆர்வம் நிலைகொள்வதில்லை. நம் வாழ்க்கையுடன், நம் ஆழுள்ளத்துடன் உரையாடி நம்மை எவ்வகையிலேனும் மாற்றியமைக்காத ஒன்றை நாம் நினைவு கூர்வதுமில்லை.

![வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1639219669l/58722966._SY475_.jpg)