இந்த ‘சாரிகள்’ இலக்கியம் வாசிக்க முடியாது. ஏனென்றால் வரும்போதே அவர்கள் ‘நிறைந்து’போய் மாறாத அளவுகோல்களுடன் வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே நம்பி ஏற்று உறுதிகொண்டிருப்பவை இலக்கியப்படைப்பில் இருக்கின்றனவா என்று பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள். இருந்தால் கொண்டாடுவார்கள், இல்லையென்றால் எதிர்ப்பார்கள். உண்மையில் அவர்கள் தங்கள் நேரத்தையே வீணடிக்கிறார்கள். ஓர் அறிதல்முறையை, ஒரு கலையை எதையும் அறியாமல் எதையும் ரசிக்காமல் அணுகுவதைப்போல வெட்டிவேலை வேறில்லை.