அவர் ஒரே கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பவராக இருக்கலாகாது. தன் தேடலை மெய்யியல் வரலாறு, தத்துவம், மானுட உறவுகள், மானுட உள்ளம் என விரிப்பவராக இருக்கவேண்டும். அதாவது தல்ஸ்தோயில் மூழ்கியிருக்கலாம், தாமஸ் மன்னில் மூழ்கியிருக்கலாம், மக்ஸீம் கார்க்கியில் மூழ்கி இருக்கக்கூடாது.