ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கையில் அது அமைந்துள்ள பண்பாட்டுத்தளத்தையும் நாம் தொட்டறியவேண்டும். அதுவே அப்படைப்பை அர்த்தப்படுத்துகிறது. அப்படி ஒரு புதிய பண்பாட்டுச்சூழலை அறிமுகம் செய்யாத படைப்பும் மேலோட்டமானதே. நாம் அறிந்த வாழ்க்கைச்சூழலை சொல்லும்போதேகூட இலக்கியப் படைப்புக்கள் ஒரு புதிய பண்பாட்டுச் சூழலையே அறிமுகம் செய்கின்றன. வட்டாரவழக்கு, வட்டாரக் குறிப்புகள் போல பண்பாட்டு நுட்பங்கள் முடிவற்றவை.