உண்மையில் அவை தத்துவம் அல்ல, தத்துவத்தின் புனைவுவடிவங்கள்தான். தத்துவம் புனைவுவடிவிலேயே மிகச்சிறப்பாக வெளிப்பட முடியும். ஏனென்றால் தத்துவத்தின் மிகச்சிறந்த கருவி உருவகம் [Metaphor] தான் அதை செவ்வியல் நாவல் அதன் மற்ற பக்கங்களில் மிகச்சிறப்பாக உருவாக்கிக் கொண்டுவர முடியும். தத்துவப்புனைவுதான் நாவல் என்னும் கலைவடிவின் முதன்மையான கலைக்கருவி. நாவலின் நோக்கமே வாழ்க்கை குறித்த பெரும்படிமங்களை, உருவகங்களை உருவாக்குவதுதான் என்பார்கள் விமர்சகர்கள்.

![வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1639219669l/58722966._SY475_.jpg)