ஃப்ளோ என நம்மவர் சொல்லும் வாசிப்புத்தன்மை இலக்கியத்திற்கு எதிரானது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது ஏற்கனவே அவ்வாசகன் அமைந்திருக்கும் இடத்திற்கு தான் வந்து பேசுகிறது என்பதே அதன் பொருள். அது எதையும் புதிதாகச் சொல்லவில்லை, எங்கும் அவனை எடுத்துச்செல்லவில்லை.