ஏனென்றால் வாசிப்புக்கு மூளையுழைப்பு தேவையாகிறது. வாசிப்பு என்பது ஒரேசமயம் நிகழும் மும்முனைச் செயல்பாடு. எழுத்தடையாளங்கள் சொற்களும் மொழிகளுமாகின்றன. மொழி காட்சிகளும் நிகழ்ச்சிகளும் மனிதர்களும் கருத்துக்களுமாக நிகர்வாழ்க்கை ஆகிறது. அந்த நிகர்வாழ்க்கையிலிருந்து மேலும் வாழ்க்கைகள் முளைத்து சரடுகளாக எழுந்து பரவுகின்றன. வாசிக்க முடியாமல் திணறுபவர்களின் உண்மையான சிக்கல் என்னவென்றால் இம்மூன்றும் ஒரே சமயம் நிகழாதென்பதே.