கடைசிவரை புழங்குகிறது. ஒரு கதையை வாசித்ததும் இன்னொன்று நினைவுக்கு வருவது அந்தக் கதையின் விளைவு அல்ல. அந்தக் கதையுடன் அதற்குத் தொடர்பும் இல்லை. அது உங்கள் மனஅமைப்பு, அந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் மனமிருந்த நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதை உடனே சொல்லிவைப்பதனால் எந்த பயனும் இல்லை, தேவையில்லாத குழப்பங்களை மட்டுமே உருவாக்கும்.