நல்ல இலக்கியப் படைப்பு நிலைபாடுகளினால் ஆனதல்ல. அது தேடலினால் ஆனது. அது கருத்துக்களை முன்வைப்பது இல்லை. அது முன்வைப்பது படிமங்களை. நான் எனக்கு பிரியமான உவமையை சொல்கிறேன். இலக்கியப் படைப்பு ஒருவகைக் கனவு. கனவு வாழ்க்கையில் இருந்து பிறப்பது என்பதனால் அது அரசியலற்றது அல்ல. ஆனால் அதன் அரசியல் ஒரு துண்டு பிரசுரத்தின் அரசியல் அல்ல. கருத்தியல் நிலைபாடு சார்ந்த, அமைப்பு சார்ந்த வாசகர்கள் படைப்பை சிறுமைப்படுத்திய பிறகே பேச ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு படைப்பை ‘நிலைபாடாக,’ ‘கருத்தாகச்’ சுருக்கி சிறுமைப்படுத்தி எதிர்கொள்வது உலகமெங்கும் நிகழ்வதே. படைப்பியக்கம் இவர்களுடைய குறுக்கல்களை மீண்டும் மீண்டும்
...more