அறிவு என்பது இரண்டுக்கும் நடுவே உருவாவது. அது ‘இதை’ சார்ந்து இருக்கும் தோறும் இதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அந்த அறிவை ‘அதை’ சார்ந்து ஆக்கும்தோறும் அது முழுமை கொள்கிறது. அதற்கான வழிமுறை ‘இதை’ மெல்ல மெல்ல இல்லாமலாக்குவது. மேலைநாட்டுக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமென்றால் தன்னிலையைக் கரைத்தழிப்பது. அறிதலை மெல்ல மெல்ல ‘என்’ அறிதல் அல்லாமலாக்குவது.

![வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1639219669l/58722966._SY475_.jpg)