இன்னொரு சாரார் வாசகர்கள். அவர்கள் எழுதுவது எழுத்தாளன் அவர்களுக்கு மிக அணுக்கமானவன் என்பதனால். எழுத்து எழுத்தாளனின் ஆழுள்ளத்தை அவர்களுக்கு அருகே கொண்டு வருகிறது. வேறெந்த மனிதரிடமும் பகிரமுடியாத சிலவற்றைப் பகிரச்செய்கிறது. படைப்புகளில் இருந்து வாழ்க்கை நோக்கி நீளும் ஒரு தேடலாக அக்கடிதங்கள் அமைகின்றன.

![வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1639219669l/58722966._SY475_.jpg)