ஏனென்றால் மனத்தையும் புத்தியையும் மூன்று தளைகள் கட்டியிருக்கின்றன. முதலில் தளையாக அமைவது நான் என்னும் உணர்வு. சுயமைய நோக்கு. குழந்தை கருவுக்குள் நுழையும்போதே அது உருவாகிவிடுகிறது என்பது நம் மரபு. அதற்கு ஆணவமலம் என்று சைவசித்தாந்தத்தில் பெயர். நான் என்பது நான் உருவாகும்போதே உருவாகி என்னுள் எப்போதும் இருக்கும் ஒரு உணர்வு.