வாசிப்பு என்பது ஒற்றைப் படையாக நிகழும் ஓர் எளிய நிகழ்வு அல்ல. வாசகன் ஒரு காலியான பாத்திரமும் அல்ல. அவனுக்கு ஒரு கருத்தியல் நிலைபாடு உள்ளது. அனுபவ மண்டலம் உள்ளது. அவனுக்கென்று ஒரு ஆன்மீக தளமும் உள்ளது. அதை இலக்கியப் படைப்பு பாதிக்கிறது. அவன் அதை எதிர்த்துத் தான் தன்னை முன் வைக்கிறான். அவன் உருவாக்கும் எதிர் வியூகத்தை உடைத்துத் தான் படைப்பு தன்னை நிறுவுகிறது.