ஒவ்வொரு செடியும் மற்ற செடிகளை எதிர்த்தே வளர்கிறது. ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் தன்னளவில் பிற அனைத்து படைப்புகளுக்கும் எதிரானதேயாகும். ஓர் இலக்கியப் படைப்பு எடுத்துக் கொள்ளும் இடம், பிற படைப்புகளிடமிருந்து பெறப்படுவதே. ஓர் இலக்கியப் படைப்பு சிறப்பாக உள்ளது என்று நாம் சொல்லும் போது பிற படைப்புகள் பலவற்றை மோசமானவை என நிராகரிக்கவே செய்கிறோம். ஒரு படைப்பை பிறிதொன்றுக்கு மேலாக வைக்காமல் இலக்கிய வாசிப்பு சாத்தியமே இல்லை. ஏன், ரசனை என நாம் சொல்வதென்ன, நுட்பமான நிராகரிப்பும் தேர்வும்தானே?