பொதுவாக வாசகர்களிடம் இருக்கும் இயல்புகளைக் கொண்டு அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். அந்தரங்க வாசகன், பொது வாசகன். அந்தரங்க வாசகன் வாசிப்பை அந்தரங்கமாகவே நிகழ்த்திக்கொள்கிறான். இலக்கியப்படைப்பில் தன் உள்ளத்தை, ஆழ்மனதை அடையாளம் காண்கிறான். தன் தனிப்பட்ட கேள்விகளை படைப்பினூடாக உசாவி தன் விடைகளைக் கண்டடைகிறான்.