அந்த ஆணவத்துடன் இணைவது முன்னரே இருந்து பிறந்ததும் வந்து ஒட்டிக்கொள்ளும் உலகியல்கூறுகள். உறவுகள், சூழல், இனமதமொழி அடையாளங்கள் என அது பலவகை. நம் செயல்கள் சிந்தனைகள் அனைத்தையுமே நாம் வந்து பிறக்கும்போது வந்து சூழும் இந்த விஷயங்கள் தீர்மானிக்கின்றன. இந்த தொடர்ச்சியையே கன்மம் என்கிறார்கள். அது முற்பிறப்பின் விளைவாக இப்பிறப்பில் தொடர்வது என்பது ஓரு விளக்கம். அவ்விளக்கத்தை ஏற்காவிட்டாலும் இது நம் சிந்தனையை வடிவமைத்துக் கட்டுப்படுத்தும் தளை என்பதை நாமே உணரலாம்.