சிந்திப்பவனுக்கு ஒரு தேடலும், ஐயங்களும் இருக்கும். இவர்களிடம் அது நிகழ்வதே இல்லை. ஆகவே உலகிலுள்ள அனைத்தையும் மறுக்க, விமர்சிக்க, கேலிசெய்யத் துணிவார்கள். அது ஆணவம் அல்ல, அறியாமையின் மூர்க்கம். ஆணவம் அறிவிலிருந்து வருவது, அறியாமையின் மூர்க்கம் அதைவிட பலமடங்கு ஆற்றல்மிக்கது. அதனுடன் பேசவே முடியாது.