எல்லாவற்றுக்கும் கடைசி நியாயம் ஆத்ம திருப்தி ஒன்றுதான். இந்த முக்கியமான விஷயத்தைக் கடைசியில் போட்டுத் தொலைத்திருக்கிறார்கள் நம் நாட்டில் தர்ம சாஸ்ரம் எழுதினவர்கள். வேதம் சாஸ்திரம், பெரியவர்களின் ஆசாரம் ஒன்றும் அனுமதிக்காவிட்டால் ஆத்மதிருப்தி என்று கடைசித் துரும்பாக இதை வைத்திருக்கிறார்கள். கடைசித் துரும்பாக இருக்கிற பல்லும் நியாயமும் பல சமயங்களில் மற்ற எதற்கும் இருப்பதில்லை”