“நரசிம்மன் உனக்கும் சோமுவுக்கும் தெய்வம் ஒன்றுதானே? உம்மைப் படைத்த தெய்வம்தானே அவனையும் படைத்தது. ஜாதி, மத, இன வித்தியாசங்கள் கடவுள் சம்மதம் என்றால், ஒரு சாதி ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தானே குழந்தை பிறக்க வேண்டும். மனிதர் மனிதருடன் சேர்ந்தால் பிள்ளை பிறந்துவிடுகிறதே? அப்படியிருக்க, எவரும் எவருடனும் சேரலாம் என்றுதானே ஆகிறது?

