இப்படிப்பட்ட சுயபேச்சு அதை உங்களால் வாங்க முடியாது என்பதற்கான அபாய எச்சரிக்கையாகும். அப்படியானால் உங்களுடைய வாங்குதிறனை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் அதைக் கடனில் வாங்காமல் ரொக்கப் பணம் கொடுத்து வாங்கிய பிறகு உங்களுடைய வாழ்க்கைமுறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாதிருந்தால், உங்களுக்கு அதை வாங்குவதற்கான திறன் இருக்கிறது என்று அர்த்தம்.