அவனுடைய பெருங்கருணை மகிமைப்படுத்தப்படும் இந்த சுலோகத்தில் பெண்ணின் நிலையும் கடைசி வருணத்தாரின் நிலையும் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது. பெண் என்று வரும்போது, மொத்தமாகவே அவள் பாபயோனியில் பிறந்தவளாகவே கருதப்படுகிறது. அவளுக்கென்று முக்குணப் பாகுபாடு, தனித்தொழிலியல்பு எதுவும் கிடையாது.

