கோயில்களில் ஒவ்வொரு இரவும் ஈசனை, ஈஸ்வரியின் பள்ளியறைக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது புருஷன் பிரகிருதி இணைவின் அடையாளம். இதன் விளைவாகப் பஞ்ச பூதங்கள் பிறக்கின்றன. அதன் அடையாளமே பூதகணாதிபதி-கணபதி. இது தாமஸ இருப்பு நிலை. ஞானவேல் முருகன் அல்லது சுப்பிரமணி சத்துவகுண நிலை. வீர பத்திரன் ராஜஸ குண நிலையின் அடையாளம். பிரக்கிருதியின் சுழற்சி, காலம் எனப்படும். அதுவே காளி, மாகாளி, அங்காளி.