மாயத்துகள்கள் குண்டூசி முனை அளவுடைய ஆகாய இடத்திலும் இன்னதென்று சொல்லமுடியாத, மாயத்துகள்கள் (விசையா, பொருளா என்று பிரித்தறிய முடியாத வெர்ச்சுவல் பார்ட்டிக்கிள்கள்) நொடிப் பொழுதில், பல கோடி மடங்கு சிறிய நேரத்திற்குள், பல பில்லியன் எண்ணிக்கையில் இடைவிடாது தோன்றித் தோன்றி மறைகின்றன என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ‘கேஸிமிர்’ விளைவு எனும் பரிசோதனையின் மூலம் இந்த மாயத்துகள்கள் இருப்பதையும் அவை மாய நிலைவிட்டு நிஜத்துகளாக மாறுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.