எந்த விதத்திலும் பரிணாமவாதத்தைப் படைப்புவாதம் முரண்படவில்லை. பரிணாமமே கடவுளின் திட்டமாகும். கடவுள் என்பதே பரிணாமம்தான். பிரகிருதியின் பரிணாமமே உண்மையில் ஈசனாகும். விதி பிறழாமல் பிரகிருதியை இயக்கி அண்டசராசரங்களை ஆக்குவதால் கடவுளை இறைவன் என்கிறோம். பிரகிருதியை ஜகத் என்கிறோம். ஜகத் என்றால் மாறுவது என்று பொருள். மாறுவதை மாறாத ஒன்று வழி நடத்தி ஜகஜீவனாக ஆகிறது.