அதிகபட்ச செவ்வியல் குணங்களுடன் வலியறுத்தப்படும் ‘தமிழ்ப் பண்பாடு' என்னும் மாயத் தோற்றத்திற்கான எதிர்வினைகளாகவே நாட்டார் பண்பாடு செயல்பட்டு வருகிறது. தட்டையான, நேர்கோட்டுத் தன்மையிலான எழுத்துப் பண்பாட்டிற்கு எதிரான கலகத்தை நாட்டார் பண்பாடு வெளிப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்வதே பண்பாட்டு ஆய்வுகளின் இன்றைய தேவையுமாக இருக்கிறது.

