எழுத்திலக்கிய வாசிப்பின் இடைவெளிகளை வாய்மொழி வழக்காற்று அறிவின் மூலம் நிரப்புவதும், நவீன எழுத்தை உருவாக்கும் உற்சாகமாக வழக்காறுகளை வரிந்து கொள்வதும் நடைபெற்றன. இது போலவே, நெடுங்காலமாய் எழுத்து சார்ந்த தகவல்களை மட்டுமே ஆவணங்களாகக் கொண்டு செய்யப்பட்ட வரலாறு, தனது நேர்மையும் முறைமையும் கேள்விக்குள்ளான போது வழக்காறுகளிருந்தும் வரலாற்றுத் தரவுகளைப் பெற முடியுமென்று சற்றே வளைந்து கொடுத்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.

