அச்செயல்முறையின்போது அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் அதோடு ஐக்கியமாகிறார், திளைத்திருக்கும் நிலையை எய்துகிறார். இரும்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் அந்த உலோகத்திற்கு ஜீவன் இருக்கிறது என்று கருதுவார். பீங்கான் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் களிமண்ணுக்கு ஜீவன் இருக்கிறது என்று கூறுவார். இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் ஐக்கியப்படுத்துவதில் ஜப்பானியர்கள் வல்லவர்கள். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டமல்ல, மாறாக அவ்விரண்டின் சங்கமம் அது.