மாபுய் எல்லோருக்கும் ஒரு சாராம்சம் அல்லது மாபுய் இருக்கிறது. அதுதான் நம்முடைய ஆன்மா. அதுதான் நம் உயிராற்றலின் மூலாதாரம். அதற்கு அழிவே கிடையாது. நாம் யார் என்பதை அதுதான் தீர்மானிக்கிறது. சில சமயங்களில், இறந்து போன ஒருவரின் மாபுய் உயிரோடு இருக்கும் ஒருவரின் உடலில் மாட்டிக் கொள்ளும். அதைப் பிரிப்பதற்கு ஒரு சடங்கு இருக்கிறது. ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், குறிப்பாக இளம் வயதில் இறந்துவிட்டால், அப்படி இறந்தவர்களின் ஆவி, இறந்தவர்களின் உலகைச் சென்றடைய விரும்பாது.