தெளிவான நோக்கத்தைக் கொண்டிருத்தல் திளைத்திருக்கும் நிலையை அடைவதற்கு இன்றியமையாதது என்றாலும், நாம் காரியத்தில் இறங்கியதும் அதை எப்படிப் பின்னால் விட்டுவிட வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் முக்கியமானதுதான். பயணம் தொடங்கியதும் அந்த நோக்கத்தைப் பற்றித் தேவைக்கு அதிகமாக நினைத்துக் கொண்டிருக்காமல் வெறுமனே அதை நம் மனத்தில் வைத்திருக்க வேண்டும், அவ்வளவுதான்.