வந்துவிட்டது? அவள் என்மேல் உயிராக இருக்கிறாள். அவள்மேல் எனக்கும் உயிர். யாரிடமும் ஒருபைசா கேட்டுக் கையேந்தி நிற்கவில்லை. ஏன் எல்லா இடத்திலும் இப்படி விரட்டுகிறார்கள்? அம்மாவுக்குக்கூட இது புரியவில்லையே. எந்தப் பெண்ணைக் கட்டியிருந்தாலும் இப்படித்தானே குடும்பம் நடத்தப் போகிறேன். அதைப் பிடித்த பெண்ணோடு நடத்துகிறேன். அதனால் யாருக்கு என்ன குறை நேர்ந்தது?