"அதிர்ச்சி இல்லை. ஆச்சரியம்தான். பத்து தலை ராவணன், வானரர்கள், பாம்புடல் இருக்கிற பதஞ்சலி, புலி உடம்பும் கையும் காலும், வண்டும் பூச்சிகளும் தொடாத அதிகாலைப் பூக்களைப் பறிக்க கையிலயும் காலிலயும் கண் இருக்கிற வியாக்ரபாதர், யானைத்தலை கணபதி, பாதி உடம்பு பொண்ணாயும் பாதி ஆணாயும் தலைமுடியில கங்கையும் ஒரு பக்கம் பிறை நிலவும் கழுத்துல பாம்பும் இருக்கும் சிவன், வாயைத் திறந்து பதினாலு லோகத்தையும் காட்டற ஒரு குழந்தை இதெல்லாம் இயல்பா எங்க வாழ்க்கையில இருக்கறபோது ஸைபோர்க்னு சொன்னா எல்லாம் அதிர்ச்சி அடைவேனா என்ன?