வசந்த், என் அன்பனே, எல்லாவற்றையும் முறித்துவிட்டு வந்திருக்கிறாய். சுதந்திரமாக இரு. உன்னைப் பிணைக்க மாட்டேன். உன்னைப் பிணைக்க நான் யார்? மௌனத்தைப் படிக்க வந்திருக்கிறாய் போலும். அதைப் புரிந்துகொள். உனக்குப் போதிக்க நான் யாருமில்லை. உனக்கான போதிமரம் இருக்கும் எங்காவது. இருந்தாலும் இதுவரை நீ பிணைந்திருந்த எல்லாவற்றிலிருந்தும் உனக்கு முக்தி அளிக்கிறேன். குடும்பப் பொறுப்புகளிலிருந்து முக்தி அளிக்கிறேன். பணம் சம்பாதிக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து முக்தி அளிக்கிறேன். குடும்பப் பாசத்திலிருந்து முக்தி அளிக்கிறேன். கூறியது, கூறாதது, கூற நினைப்பது, கூறப்போவது, எல்லாவற்றிலிருந்தும் முக்தி அளிக்கிறேன்.
...more
Kaviya liked this