வீழ்தல் அவள் வாழ்க்கையின் அதிமுக்கியமான சொல்லாகத் தோன்றியது. அது அடிக்கடி அவள் மனத்தில் வந்துபோகும் சொல். திருச்சதகத்தில் "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" செய்யுளில் "பலகாலும் வீழ்கின்றாய் அவலக் கடலாய வெள்ளத்தே" என்று வரும். வீழ்ந்து வீழ்ந்து எழுபவள் அவள். இந்த முறை வீழ்தல் மட்டும் நிச்சயமான ஒன்று.