பொலிக பொலிக! - ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு [Poliga Poliga]
Rate it:
6%
Flag icon
தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற  விலை மதிப்பற்ற சாந்தம்.
Krishnamurthi Balaji
மொழியின் ஆளுமை என்ற விஷயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: உவமானம். வெய்யோனின் சுடர் இவரது கண்களில் ஒளிரும் சுடருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எத்தனை அழகு!
8%
Flag icon
திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.'
Krishnamurthi Balaji
மொழியின் ஆளுமைக்கு இதுவும் எடுத்துக்காட்டு. 'திருதராஷ்டிரத் தழுவல்" என்ற இரண்டு சொற்களுக்குள் மகாபாரதக் கதை ஒன்று பின்னணியில் நிற்கிறது!
9%
Flag icon
கடமையின்மீது சற்று அன்பைத் தெளித்தால் அது கருணையாகிவிடுகிறது.
Krishnamurthi Balaji
"கடமையின்மீது சற்று அன்பைத் தெளித்தால் அது கருணையாகிவிடுகிறது" - சிந்தனையைத் தூண்டுகிற ஒரு சிறப்பான செய்தி ! கருணையை நோக்கிக் கை காட்டிவிடுகிற ஒரு கரிசனம் !
9%
Flag icon
கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து.
Krishnamurthi Balaji
"கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து" - மொழி ஆளுமை - திருக்குறள் வரிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன!
11%
Flag icon
புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு.
Krishnamurthi Balaji
"புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு" - சொல்லாட்சி சுவை சேர்த்து நடனம் ஆடுகிறது ! தெளிவு என்ற சொல், அதன் பொருள், அதன் பரிணாமம் அனைத்தும் இந்த ஒரு வாக்கியத்தில்!
45%
Flag icon
சரணாகதிக்கு எம்பெருமான்கூடத் தேவையில்லை. அவன் பாதங்கள் போதும். அதன்மீது வைக்கிற முழு நம்பிக்கை அனைத்தையும் கொண்டு சேர்க்கவல்லது என்பதே முக்கியம்.
Krishnamurthi Balaji
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
45%
Flag icon
பேதம், பெருவிஷம்.’
Krishnamurthi Balaji
🙏🏼🙏🏼🙏🏼
48%
Flag icon
சுத்த வைணவன் என்றால் சாதி பார்க்க மாட்டான். மனித குலம் முழுதும் ஒரே சாதி என எண்ண முடிந்தவனால்தான் பரமாத்மாவின் பாதங்களை எட்டிப் பிடிக்க முடியும்.
Krishnamurthi Balaji
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
50%
Flag icon
சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று.
Krishnamurthi Balaji
வைத்தியன் மேல் நம்பிக்கை ! அதாவது அவனிடம் சரணாகதி! இங்கும் எங்கும் சரணாகதி தத்துவம் ! அடிப்படை அதுதான் என்பது வியாக்கியானம்
67%
Flag icon
முடிவெடுக்கிறவரைதான் யோசனை. தீர்மானம் வந்துவிட்டால் அடுத்தக் கணம் செயல்தான்.
Krishnamurthi Balaji
🙏🏼🙏🏼🙏🏼