வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் உலகத்தில் ஒரு காலையும் இறந்தவர்களின் உலகத்தில் அடுத்த காலையும் வைப்பது என்பதே ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் முழுமையான நிலைப்பாடு. அப்போது அவன் சமநிலையை எய்துகிறான். அப்போது அகப்பார்வை வெகுஆழத்தை எட்டுகிறது. அஞ்சுவதற்கு எதுவுமில்லை. தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவனுடையது. முயற்சித்தால் விரும்பும் இடத்தை நோக்கி அவன் நகர இயலும். ஆனால், இந்த இரண்டு உலகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம். எனக்கு வேறு வழி இருக்குமென்றால், நிழல்களின் புலப்படாத வேறொரு உலகமோ ஒரு சந்திர உலகமோ அத்தகைய ஏதோ ஓரிடம் இருக்குமென்றால், நான் இப்போது அங்கு போயிருப்பேன். மற்ற
...more