புலனடக்கம் என்ற வழியிலும் கூட்டுப்பணி என்கிற புள்ளியிலும் மட்டுமே தங்களுக்கு மீட்சி இருப்பதாக எனது பெற்றோர் கருதினர். அந்த நம்பிக்கை என்னிடம் இல்லாமல் போனதால்தான் எனது கால்தடங்கள் தரையைவிட்டு உயர்ந்தன. வானத்தில் மேகங்களுடன் திரிவதற்கும் பாதாளச் சேற்றில் களைப்புற்று விழுவதற்கும் என்னால் முடிந்தது.